Friday 19 April 2013

பென்சன் அரியர் வழங்க ஏன் இந்த தாமதம் ?




பென்சன் அரியர் வழங்க ஏன் 
இந்த தாமதம்?

இராணுவ பென்சனர்கள் அனைவரும் அமைதியாக பல வேண்டுகோள்கள் விடுத்தும், வங்கிகள் இன்னும் மேம்படுத்தப்பட்ட பென்ஷனை வழங்கவில்லை.  ஏன் இந்த தாமதம் ?  பென்சனர்கள் வங்கிகள் முன் போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைகிரார்களா ?

தாமதத்திற்கு வங்கிகள் முறையாக நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.  அதுதான் ஒரு நல்ல நிர்வாகத்துக்கு அழகு.

தாமதமின்றி உரிய நேரத்தில் இந்த கூடுதல் பென்சன் தொகையை மாதாமாதம் அதே வங்கியில் ஒரு பென்சனர் முதலீடு செய்திருந்தால் அதற்க்கு கீழ் கண்ட விகிதத்தில் வட்டி கிடைத்திருக்கும்.

15 ஆண்டு y குருப் சிப்பாய் மார்ச்  2013 முடிய ரூ. 121 வட்டி கிடைக்கும்.
17 ஆண்டு y குருப் நாயக்    மார்ச்  2013 முடிய ரூ. 128 வட்டி கிடைக்கும்.         
20 ஆண்டு y குருப் ஹவில்தார் மார்ச்  2013 முடிய ரூ. 186  வட்டி கிடைக்கும்.            
28 ஆண்டு ஆனரரி லெப்டினன்ட்  2013 முடிய ரூ. 476  வட்டி கிடைக்கும்.       
28 ஆண்டு ஆனரரி கேப்டன்   2013  முடிய 556  வட்டி கிடைக்கும்.

குடும்ப பென்சனர்களுக்கு இதை விட கூடுதல் வட்டி கிடைக்கும்.

எனவே வங்கிகள் நியாயமான முறையில், பென்சனர் கேட்காமலே இந்த வட்டியை வழங்குவது தான் நல்ல வங்கிக்கு அழகு.  செய்வார்களா ?

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...